102

2. நெய்தல் (11)
தாய்க்குரைத்த பத்து


102. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்
    நீனிறப் பெருங்கடற் புள்ளி னானாது
    துன்புறு துயர நீங்க
    இன்புற 1விசைக்குமவர் தேர்மணிக் குரலே.

இதுவுமது.

  குறிப்பு. கடற் புள்ளின்-கடற் பறவைகளைப் போல. ஆனாது-
அமையாமல். இசைக்கும்-ஒலிக்கும். தேர் மணிக்குரல் புள்ளின்
ஆனாது இசைக்கும். தேர் மணியொலிக்குப் புள்ளொளி : நற்.
178 : 9 ; 287 : 9-10.

   (பி-ம்.) 1 ‘விரைக்குமவர்?.       ( 2 )