106

2. நெய்தல் (11)
தாய்க்குரைத்த பத்து


106. அன்னை வாழிவேண் டன்னை யவர்நாட்டுத்
   துதிக்கா 1லன்னந் துணைசெத்து மிதிக்கும்
   தண்கடல் வளையினு மிலங்குமிவள்
   அங்கலி ழாகங் கண்டிசி னினைந்தே.

  எ-து அறத்தோடு நின்றதோழி அது வற்புறுப்பான் வேண்டிச்
செவிலிக்குச் சொல்லியது.

  (ப-ரை.) தண்கடல் வளையினும் இலங்குமென்றது மேனியில்
வேறுபாடு.

  குறிப்பு. துதி காலன்னம்-தோலடியையுடைய அன்னம்;
துணை-பெடை, செத்து-அறிந்து. வளையினும் சங்கைக் காட்டிலும்.
அன்னப் பெடைக்குச் சங்கம் உவமை. அம் கலிழ் ஆகம்-அழகு
ஒழுகுகின்ற உடம்பு; ஐங். 174 : 4; குறுந். 143 : 7, 147 : 2, கண்டிசின்
காண்பாயாக; ஐங். 105 - வளையினும் இலங்கும் இவள் ஆகத்தை
நினைந்து கண்டிசின். உடம்பு விளர்த்தது இளைப்பினாலன்று
என்றபடி.

  (பி-ம்.) 1 ‘லன்னநீ துணைசெத்து?          ( 6 )