134


(14) பாணற்குரைத்த பத்து


134. காண்பதி பாண விருங்கழிப் 1பாய்பரி
   நெடுந்தேர்க் கொண்க னோடு
   தான்வந் தன்றென் மாமைக் கவினே.

  எ-து பிரிவின்கண் தலைமகள் கவின் தொலைவு கண்டு வெறுத்து
ஒழுகுகின்ற பாணற்குத் தலைமகன் வந்துழிக் கவினெய்திய
தலைமகள் சொல்லியது.

  குறிப்பு. இருங்கழியையும் பாய்பரியையும் தேரையுமுடைய
கொண்கன், மாமைக்கவின்-மாமையாகிய பேரழகு கொண்கனொடு
மாமைக்கவின் வந்தன்று.

 வெறுத்து-தலைமகளை வெறுத்து. (பி-ம்.) 1 ‘பாய்பணி?  ( 4 )