169


(17) சிறுவெண்காக்கைப் பத்து


169. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
    பொன்னிணர் ஞாழன் 1முனையிற் பொதியவிழ்
    புன்னையம் 2பூஞ்சினைச் சேக்குத் துறைவன்
    நெஞ்சத் துண்மை யறிந்தும்
    என்செயப் பசக்குந் தோழியென் கண்ணே.

 எ-து காதற்பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகா
நின்ற தலைமகன் வாயில்வேண்டி விடுத்துழி வாயினேர்தல்வேண்டி
நின்கண் பசந்தனகாணென்று முகம்புகு தோழிக்குத் தலைமகள்
சொல்லியது.

  (ப-ரை.) சிறுவெண்காக்கை ஞாழலை வெறுப்பின் புன்னைச்சினை
யிற் சேக்குமென்றது பரத்தையர் மனையில் ஒன்று வெறுப்பின்,
ஒன்றின்கண் தங்குதலையுடையானென்பதாம்.

   குறிப்பு. பொன்னிணர் ஞாழல்-பொன்னிறமான பூங்கொத்துக்
களையுடைய ஞாழல். முனையின்-வெறுப்பின்; குறுந். 296 : 3. பூஞ்
சினை-பூக்களையுடைய கிளையில், நெஞ்சத்துண்மை-நெஞ்சத்தி
லுள்ளதை. அறிந்தும் என் கண் என்செயப் பசக்கும்; கண்பசத்தல் :
ஐங். 170 : 4; குறுந். 13 : 5.

    (பி-ம்.) 1 ‘முனையிற்’ 2 ‘பூஞ்சினை வதியுந்’ ( 9 )