193

(20). வளைப் பத்து


193. வலம்புரி யுழுத வார்மண லடைகரை
   இலங்குகதிர் முத்த மிருள்கெட விமைக்கும்
   துறைகெழு 1கொண்கநீ தந்த
   அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே.

 எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் தலைமகட்கு வளை
கொண்டுவந்து கொடுத்துழி, ‘2பண்டை வளை போலாவாய் மெலித்
துழி நீங்கா நலனுடையவோ இவை? எனத் தலைமகள் மெலிவு
சொல்லித் தோழி வரைவு கடாயது

  (ப-ரை.) முத்தம் இருள் நீங்க இமைக்கும் துறைவனாதலின்,
இவட்கு வருகின்ற தீங்கைக் கடிதின் நீக்கி வரைந்துகொள்ள
வேண்டுமென்பதாம்.

  குறிப்பு. வலம்புரி-வலப்புறமா வளைவையுடைய சங்கு.
கரையின்கண். முத்தம்-முத்துக்கள். இருள்கெட-இருள்நீங்க.
இமைக்கும்-ஒளிவிடுகின்ற. அறைபுனல் வால்வளை-கடலிலுள்ள
வெண்மையான சங்கால் இயன்ற வளைகள், நல்லவோ-நல்ல
வைகளோ : மெலிந்துழி நீங்கா நலனடையவோ என்றபடி.

  (பி-ம்.) 1 ‘கொண்கனீ? 2 ‘பண்டையிவள் வளை? 3 ‘வேணும்?   ( 3 )