200

(20). வளைப் பத்து


200. இலங்குவீங் கெல்வளை யாய்நுதல் கவினப்
    பொலந்தேர்க் 2கொண்கன் வந்தன னினியே
    விலங்கரி நெடுங்கண் ஞெகிழ்மதி
    4நலங்கவர் பசலையை 5நகுக நாமே.

 எ-து உடன்போக்குத் துணிந்தவழி அதற்கு இரவின்கண்
தலைமகன் வந்ததறிந்த தோழி தலைமகளைப் பாயலுணர்த்திச் சொல்
லியது.

   குறிப்பு. எல்வளை; விளி. ஆய் நுதல்கவின-மெலிந்த நெற்றி
பசலை நீங்கி அழகு பெற. கண்ஞெகிழ்மதி என்றது துயிலுணர்த்
தியபடி. நலம்-அழகை. நகுகம்-இகழ்ந்து சிரிப்போம். எல்வளை,
கொண்கன் வந்தனன்; பசலையை நகுகம், கண் ஞெகிழ்மதி.

  (மேற்.) மு. இதில் அனந்தல் தீர என்றதனானே உடன்கொண்டு
போதற்கு வந்தானனெனப் பாயலுணர்த்தியது (தொல். அகத். 39,.)
  (பி-ம்.) 1 ‘கவின்பெறப்? 2 ‘கொண்கனும்? 3 ‘நெடுங்கண்ண
னந்த றீர்மதி? 4 ‘நலங்கிளர்? 5 ‘நகுகம்யாமே?.   ( 10 )

(20) வளைப்பத்து முற்றிற்று.

நெய்தல் முற்றிற்று.

அம்மூவனார்