230

3. குறிஞ்சி

(23) அம்மவாழிப் பத்து


230. அம்ம வாழி தோழி நம்மொடு
    சிறுதினைக் காவல னாகிப் பெரிதுநின்
    மென்றோண் ஞெகிழவுத் திருநுதல் பசப்பவும்
    பொன்போல் விறற்கவின் றொலைத்த குன்ற நாடற் கயர்வர்நன் மணனே.

  எ-து தலைமகன் வரைவுவேண்டித் தமரை விடுத்துழி
மறுப்பர் கொல்லோவென்று அச்சமுறுகின்ற தலைவிக்குத் தோழி
சொல்லியது.

  குறிப்பு. தினைக்காவலனாகி-தினைப்புனத்தில் காவல் காப்
பானாகி. தோள் ஞெகிழ்தலும் நுதல் பசத்தலும் : ஐங். 277 : 2.
பொன்போல் கவின் : ஐங். 105 ; நற்.10 : 2; குறுந். 101 : 4, 319:6
அகநா. 212 : 1-2. தொலைத்த-அழித்த. அயர்வர்-செய்வர்.
மணன்-திருமணத்தை. நாடற்கு மணனை அயர்வர்.

  (மேற்). மு. தமர் வரைவுடம்பட்ட தன்மையினால் தலைவியை
வற்புறுத்தற்கண் தோழிக்குக் கூற்று நிகழும் (தொல். களவு. 24,
ளம்.) பாங்கி தமர் வரைவெதிர்ந்தமை தலைமகட் குணர்த்தல்
(நம்பி. வரைவு. 4.)

(23) அம்மவாழிப்பத்து முற்றிற்று.