எ-து ஒருவழித் தணந்துவந்த தலைமகட்குத் தோழி கூறியது.
குறிப்பு. யாங்கு-எப்படி. வல்லுநையோ-வல்லவனானாயோ.
வெற்ப : விளி, இரும்பல் கூந்தல்-கரிய பலவாகிய கூந்தல்: ஐங்.
281 : 3 ; குறுந். 19 : 5 ; அகநா. 142 : 18 ; திதலை-தேமல், மாமை
தேயப் பசலை பாய்தல் : குறுந். 27 : 4-5, தெய்ய : அசைநிலை
இடைசொல்; தெய்யோவெனத் திரிந்தது. வெற்ப, பிரிதல் யாங்கு
வல்லுநையோ.
(மேற்) மு. பிரிந்து மீண்டுவந்த தலைவன் தன்னொடு நொந்து
நொந்து வினாதல் (நம்பி. களவு, 52).
(பி-ம்) 1 ‘வல்லுனையோ? ‘வல்லினையோ? ( 1 )