247

3. குறிஞ்சி

  5) வெறிப் பத்து


247. அன்னை தந்த தாகுவ தறிவன்
   பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி
   முருகென மொழியு மாயின்
   அருவரை நாடன் பெயர்கொலோ வதுவே.

  எ-து வெறிவிலக்கலுறுந்தோழி தமர்கேட்பத் தலைவனை வினவு
வாளாய்ச் சொல்லியது.

  குறிப்பு. அறிவன்-வெறியாட்டாளன். கன்னம்தூக்கி : ஐங்.
245 ; 2, குறிப்பு. அருவரை நாடன் பெயர் அதுவே கொலோ?

  (மேற்) அடி, 2, கன்என்னும் சொல் வேற்றுமைக்கண் அகரமும்
வரும் வல்லெழுத்தும் பெற்று முடியும்; ‘கன்னந்தூக்கி? என்பதோ
வெனின், அது மகரவீற்றுப் பொருட்பெயர் (தொல். புள்ளி மயங்கு.
51, ந.)

   மு. வெறியாட்டு நிகழ்வுழித் தோழி தமர் கேட்பக் கூறியது
(தொல். களவு. 23, ந.)