249

3. குறிஞ்சி

  5) வெறிப் பத்து


249. பெய்ம்மணல் வரைப்பிற் கழங்குபடுத் தன்னைக்கு
    முருகென மொழியும் வேலன் மற்றவன்
    வாழிய விலங்கு மருவிச்
    சூர்மலை நாடனை யறியா தோனே.

  எ-து வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய்
கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது.

  குறிப்பு. கழங்கு படுத்து-கழற்சிக்காயிட்டு எண்ணி. அவன்
என்றது வேலனை. இலங்கும்-விளங்குகின்ற. சூர்-அச்சம் பொருந்திய.
வேலன் முருகென மொழியும், நாடனை அறியாதோன், அவன்
வாழிய. ( 9 )