332

4 பாலை

(34) தலைவி1யிரங்கு பத்து


332. அம்ம வாழி தோழி யென்னதூஉம்
   அறனில் மன்ற தாமே விறன்மிசைக்
   குன்றுகெழு கானத்த பண்பின் 1மாக்கணம்
   கொடிதே காதலிப் பிரிதல்
   செல்ல லைய2வென்னா தவ்வே.

    எ-து பிரிந்த தலைமகன், ‘சுரத்திடைக் கழியச் சென்றான்?
என்பது கேட்ட தலைமகள் அங்குள்ள மாக்களை நொந்து தோழிக்குச்
சொல்லியது.

   குறிப்பு. என்னதூஉம்-சிறிதும். அறன்இல-அறமில்லாதன.
மாக்கணம்-விலங்கின் கூட்டம். காதலிப் பிரிதல்-காதலியைப்
பிரிதல். செல்லல்-போதல் வேண்டா, என்னாதவே-என்று கூறா
தனவே மாக்கணம், ‘ஐய, பிரிதல் கொடிது செல்லல்? என்னாதவே,
ஆதலின், அறனில.

    (பி-ம்.) 1 ‘மான்கணம்? 2 ‘வென்னாவவ்வே? ( 2 )