339

4 பாலை

(34) தலைவி1யிரங்கு பத்து


339. அம்ம வாழி தோழி சிறியிலைக்
    குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீ இய
    வாவ லுகக்கு மாலையும்
    இன்றுகொல் காதலவர் சென்ற நாட்டே

   எ-து தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப்பொழுது
கண்டு ஆற்றளாகி தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

   குறிப்பு. குறுஞ்சினை - குறுகிய கிளைகளையுடைய. வேம்பின் நறும்
பழம்- வேம்பினது வாசனை பொருந்திய பழத்தை உணீஇய. உண்
ணுதற்கு. வாவல் உகக்கும் -வௌவால் உயரச் செல்லும். மாலை
யில் பழுமரம் நோக்கி வௌவால் செல்லுதல்: ஐங். 378 : 1-2:
குறுந். 172 : 1-2 இன்றுகொல் - இல்லையோ. நாட்டு மாலையும்
இன்றுகொல்.

  (மேற்) மு திணைமயக்குறுதலுள் பாலைக்கண் மாலை வந்தது.
(தொல். அகத் 12, ); இ.வி. 394 (பி-ம்) 1 ‘லுகுக்கு’, ‘லுவக்கு’
2'தோழியவர்’ ( 9 )