4 பாலை
(36) வரவுரைத்த பத்து
354. ஈம்பிணவு புணர்ந்த செந்தா யேற்றை மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும் அரிய சுரன்வந் தனரே தெரியிழை யரிவைநின் பண்புதர விரைந்தே.
இதுவுமது.
குறிப்பு. ஈர்ம்பிணவு - அன்புடைய பெட்டையை. ஏற்றை: ஆண்பாற் பெயர். மறி-குட்டி மான்பிணை- பெண்மான். கொள்ளாது - பற்றாமல். அரிவை : விளி. விரைந்து சுரனின்றும் வந்தனர். ( 4 )