381

4 பாலை

(39) உடன் போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து


381. பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
    செங்கான் மராஅத்த விரிநிழ லிருந்தோர்
    யார்கொ லளியர் தாமே வார்சிறைக்
    1குறுங்கான் மகன்றி லன்ன
    உடன்புணர் கொள்ளைக் காத லோரே.

    எ-து உடன்போக்கின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்
லியது.

    குறிப்பு. பைங்காய் நெல்லி - பசுமையான நெல்லிக்காயை
மிசைந்து-உண்டு மராத்த-வெண்கடம்ப மரத்தின் அடியிலுள்ள.
அளியர்-அளிக்கத் தக்கவர். வார்சிறை - நீண்ட சிறகு மகன்றில்-
ஒருவகைப் பறவை: குறுந், 57 : 2; சீவக. 1250; பெண் அன்றில்
என்றும் கூறுவர். மகன்றிற் புணர்ச்சி : ?நீருறை மகன்றிற் புணர்ச்சி
போல பிரிவரிதாகிய ?(குறுந். 57 : 2-3); பரி. 8 : 44. நிழலிருந்
தோராகிய காதலோர் யார் கொல்.

    (பி-ம்) 1‘குறுங்கா னகன்றி? ( 1 )