387

4 பாலை

(39) உடன் போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து


387. அறம்புரி யருமறை நவின்ற நாவின்
    திறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென்
    றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே
    கண்டென மம்ம சுரத்திடை 1யவளை
    இன்றுணை யினிதுபா ராட்டக்
    குன்றுயர் பிறங்கன் மலையிறந் 2தோளே.

    எ-து பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர்
அவட்குச் சொல்லியது.

   குறிப்பு. மறை-வேதம் திறம்-விதம். கொள்ளை -விரதம்.
அந்தணிர்-அந்தணர்களே; விளி தொழுவல் - தொழுகிறேன்.
ஒண்டொடி-தலைவியைப் பற்றி. பெண்டே ; செவிலியை நோக்கிய
விளி கண்டனெம் -பார்த்தோம். துணை - தலைவன். குன்று - சிறு
மலைகள், பிறங்கல் - பிறங்குதல். இறந்தோளைக் கண்டனெம்.

    (மேற்.) மு. செவிலி வினா அயவழிக் கண்டோர் கூற்று நிகழும்
(தொல் அகத். 43, இளம.் 40, ந.)

   (பி-ம்) 1‘யவளே’ 2‘தோரே’ ( 7 )