402

5. முல்லை

(41) செவிலிகூற்றுப் பத்து


402. புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
    நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
    நரம்புளர் முரற்கை போல
    இனிதா லம்ம பண்புமா ருடைத்தே.

     குறிப்பு. புதல்வற் கவைஇய-புதல்வனைத் தழுவிய. தாய்புறம்-
தாயினது முதுகை. நசையினன்-விருப்பமுள்ளவனாக. வதிந்த-
தங்கிய. முரற்கை-துள்ளலோசை: ஐங். 407 : 2; மலைபடு. 390.
கிடக்கை இனிது, பண்பும் உடைத்து; ஆல், மார் : அசைநிலைகள்.
மு. ஒப்பு. குறுந். 359.