403

5. முல்லை

(41) செவிலிகூற்றுப் பத்து


403. புணர்ந்த1கா தலியிற் புதல்வன் றலையும்
   அமர்ந்த வுள்ளம் பெரிதா கின்றே
   அகன்பெருஞ் சிறப்பிற் றந்தை 2பெயரன்
   முறுவலி னின்னகை பயிற்றிச்
   சிறுதே ருருட்டுந் தளர்நடை கண்டே.

     குறிப்பு. காதலியின்-தலைவியினும். புதல்வன் தலையும்-தலைவ
னிடத்தில்; உம்மை : அசைநிலை. தந்தை பெயரன்-தலைவனது
தந்தையின் பெயரையுடையவனாகிய புதல்வனது; தலைவன் தன்
தகப்பனார் பெயரைத் தன் பிள்ளக்கிடுதல் மரபு : (கலித். 75 :
23-5; ?எந்தை பெயரனை யாங்கொள்வேம்? (கலித். 81 : 35)
சிறுதேர் உருட்டல் : ?ஊரா நற்றே ருருட்டிய புதல்வர்? பெரும்
பாண். 249); பட். 24-5; குறுந். 61 : 1-3. கண்டு பெரிதாகின்று.

   (பி-ம்.) 1 ‘காதலின்? 2 ‘பெயரான்? ( 3 )