5. முல்லை
(41) செவிலிகூற்றுப் பத்து
406. மாத ருண்கண் மகன்விளை யாடக் 1காதலித் தழீஇ யினிதிருந் தனனே தாதார் பிரச 2மூதும் போதார் புறவி னாடுகிழ வோனே.
குறிப்பு. மாதர்-காதலையுடைய, காதலியைத் தழீஇ. பிரசம்-வண்டு; ஐங். 417 : 3, போதார்-மலர்நிறைந்த. கிழவோன் இருந்தனன்.
(மேற்.) மு. தலைவன் பரத்தையிற் பிரிவொழிந்து மனைக்கண் இருந்தது (தொல். கற்பு. 31, ந.)
(பி-ம்.) 1 ‘காதலிற் றழீஇ? 2 ‘முரலும்? ( 6 )