50

(5) புலவிப் பத்து


50. துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
   வஞ்சி யோங்கிய யாண ரூர
   தஞ்ச மருளாய் நீயேநின்
   நெஞ்சம் பெற்ற விவளுமா ரழுமே.

  எ-து மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பன்னாள் தங்கி
வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

   குறிப்பு. துணையோர்-ஆயத்தார். யாம் என்றது தோழி. வஞ்சி -
ஒருவகை மரம்; மருதத்துக்குரியது. தஞ்சம் : எளிது என்னும்
பொருளை உணர்த்தும் ஓரிடைச் சொல். நின்னை நெஞ்சத்திற்
பெற்ற இவளும் அழும், செல்வமும் யாமும் வருந்துதும், அருளாய்.         ( 10 )

(5) புலவிப்பத்து முற்றிற்று.