473

5. முல்லை

(48) பாணன் பத்து


473. பலர்புகழ் சிறப்பினுங் குருசி லுள்ளிச்
   செலவுநீ நயந்தனை யாயின் மன்ற
   இன்னா வரும்பட ரெம்வயிற் செய்த
   பொய்வ லாளர் போலக் கைவல் பாணவெம் மறவா தீமே.

     எ-து ‘தலைமகன் பிரிந்தநாட்டிற் செல்வேம்? என்ற அவன்
பாணற்குத் தலைமகள் சொல்லியது

    குறிப்பு. குருசில் உள்ளி-தலைவனை நினைந்து. செலவு நீ
நயந்தனையாயின்-செல்லுதலை நீ விரும்பினையாயின் ; முருகு. 64.
படர்-நோயை. பொய்வலாளர்-பொய் கூறுதலில் வல்லவனான
தலைவன். கைவல் பாண ; ஐங் 472 : 1. எம்மை மறவாதீமே ; மே :
அசைநிலை.

   (மேற்.)மு. இது தூதுவிடக்கருதி தலைவி கூறியது. (தொல்.
கற்பு. 6, ந.). ( 3 )