5. முல்லை
(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து
498. தோள்கவி னெய்தின தொடிநிலை நின்றன நீள்வரி நெடுங்கண் வாள்வனப் புற்றன ஏந்துகோட் டியானை வேந்துதொழில் விட்டென விரைசெல னெடுந்தேர் கடைஇ வரையக நாடன் வந்த மாறே.
இதுவுமது.
குறிப்பு. தோளும் தொடியும்: ஐங். 475 : 1, வாள் வனப்பு-ஒளி மிக்க அழகை. ஏந்திய கோட்டையுடைய. விட்டென-விட. கடைஇ-செலுத்தி. வந்தமாறே தோள் கவின் எய்தின. ( 8 )