52

(6) தோழிக்கூற்றுப் பத்து


52. வயலைச் செங்கொடிப் பிணைய றைஇச்
   செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
   செவ்வாய்க் குறுமக ளினைய
   எவ்வாய் முன்னின்று மகிழ்ந நின் றேரே

 எ-து வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகை
யாடிச் சொல்லியது.

 குறிப்பு. பிணையல் தைஇ-மாலை புனைந்து, செவ்விரல் சிவந்த-
இயற்கையாகச் செம்மையுள்ள விரல் மிகச் சிவந்த; ?செவ்விரல்
சிவப்பூர? (கலித். 76 : 6). இனைய-வருந்த. எவ்வாய்-எவ்விடத்தை.
முன்னின்று-கருதியது.            ( 2 )