குறிப்பு. கதிர்-ஒளி. கடுமான்-வேகம் மிக்க குதிரையையுடைய.
கிள்ளி-சோழனது. யானையின்-யானையைப்போல. புதுப்புனலுக்கு
யானை ; சீவக. 41 ; திருவிளை. வையையழைத்த. 78. கதழ்பு-
விரைந்து. தோள்புரை புணை-தோளை யொத்த தெப்பம் ; குறுந்.
168 : 5, எம்மொடு புணை கொண்மோ, புனல் ஆடுகம். இனித்
தலைவியோடு புணைகொள்ளலாகாது என்பது கருத்து.
(மேற்.) மு. ‘காமக்கிழத்தி நின் மனைவியோடன்றி எம்மொடு
புணை கொள்ளின் யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந்தாள்
போல மறுத்தது? (தொல். கற்பு, 50. ந.)
(பி-ம்) 1 ?கதிமான் கிள்ளி? 2 ‘கதவுநெரி தந்த? ( 8 )