79
(8) புனலாட்டுப் பத்து

 


79. புதுப்புன லாடி யமர்த்த கண்ணள்
 யார்மக ளிவளெனப் பற்றிய மகிழ்ந
 யார்மக ளாயினு மறியாய்
 நீயார் மகனையெம் பற்றி யோயே.

 எ-து தன்னொடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக்
கேட்டுத் தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தானும் தனியே
போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத்
தலைமகன் சென்று தான் அறியான்போல நகையாடிக்கூறிக் கைப்
பற்றியவழி அவள் தோழி சொல்லியது.

  குறிப்பு. அமர்த்தகண்ணள்-போரைச் செய்கின்ற கண்ணை
யுடைய பரத்தை. அறியாய்-அறியமாட்டாய். மகளை; ஐ : சாரியை.
எம் என்றது பரத்தையை உளப்படுத்தியது. எம் பற்றியோய் நீ யார்
மகன்?              ( 9 )