95

(10) எருமைப்பத்து

 


95. கருங்கோட் டெருமை கயிறு பரிந்தசைஇ
 நெடுங்கதிர் நெல்லி னாண்மேய லாரும்.
 புனன்முற் றூரன் பகலும்
 படர்மலி யாருநோய் செய்தன னெமக்கே.

 எ-து உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கிப் பரத்தை
யிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி அவற்கு வாயிலாய் வந்தார்க்குத்
தலைமகள் சொல்லியது.

 (ப-ரை.) எருமை கயிற்றைப் பரிந்துபோய் நாண்மேயலாருமென்
றது விலக்குவார்க்கு அடங்காது புறத்தொழுக்கம் விரும்புவான் எ-று.

 குறிப்பு. பரிந்து-அறுத்து. அசைஇ-சென்று. நாண்மேயலாரும்-
விடியலிலே மேயும். ஊரன் எமக்கு நோயைச் செய்தனன். ( 5 )