எ - து: பூணெகிழ்ந்து விழும்படி நம்மை வருத்தமுறுத்தினோன் குன்றாயிருந்தும் பக்கமலைகளின்மேலே வைத்த தேனை இடத்தேயுடைய இறால் மழையிலே நுழைகின்ற மதியைப்போலத் தோன்றாநிற்கும், இதற்குக்காரணம் என்னெனத் தோழி இயற்பழித்தாள்;எ - று. இது தேன் பயன்படுதல்கூறினாள். இதன்கண் தோழி இயற்பழித்தன எல்லாம் பொருட்புறத்திறைச்சி தோன்றியவாறு காண்க. 25 | எஞ்சா தெல்லா கொடுமை நுவலாதி (1) யஞ்சுவ தஞ்சா வறனிலி யல்லனென் னெஞ்சும் 1பிணிக்கொண் டவன். |
எ - து; இங்ஙனந் தோழி இயற்பழித்ததற்குப் பொறாளாய், ஏடீ ! ஒழியாமல் அவன் கொடுமையைக் கூறாதேகொள், என்னெஞ்சத்தைத் தன்னன்பாற் பிணித்தல்கொண்டவன் பிறரஞ்சுங்கொடுந்தொழிற்கு அஞ்சாத அறனில்லாதவன் அல்லனெனத் தலைவி இயற்படமொழிந்தாள்; எ - று. 28 | (2) என்றியாம் பாட மறைநின்று கேட்டனன் றாழிருங் கூந்தலென் றோழியைக் கைகவியாச் |
பொதிக்க ணிறாஅற் பூம்புறம் புதைஇ,மதிக்கண் மறைந்த மாசுணமான,மணிவரை மருங்கி னணிபெற வொழுகி" பெருங். (1) 50; 34. 37.(இ) "முகிறவழ்பொற், கோட்டிற் றொடுத்த விறாலுமொளிர் குளிர்மா மதியு மினிதுணர்வான், காட்டு கென்னக குறமகளிர் தத்தங் கணவர்க் கைதொழுவார்" காசிகண்டம். காசியின்சிறப். 7. (ஈ) "விழுமணிக் கோட்டு நெற்றி யிறாலினை விளங்கு வெள்ளை, முழுமதியென்று வான முள்ளெயிற் றரவங்காக்கு,மழைதவழ் சுவேத மென்னு மால்வரை"(உ) "கலைநிறை மதியி னோடு கழைவள ரிறாலைவானத்,தலைமுலை மாத ரொப்பு நோக்கருங் கயிலை வெற்பு"இலிங்க. நவவருடத்தினடைவு. 6; நவவருடத்தினெல்லை. 31. (ஊ) "புடைகலந்த தேனினங்கள் பகன்மதியை யிறாலென்னப் புகுந்து மொய்க்குங், குடுமிவரை" பிரமோத்தர. சிவதான. 12. 1. (அ) "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ,தஞ்ச லறிவார்தொழில்" குறள். 428. இவைகளும் (ஆ) ”அஞ்சுவதஞ்சி..................வாழு மியல்புடை யார்”நாலடி. 74. இவைகளும் (இ) தறுகணன் என்பதற்கு 'அஞ்சத்தக்கவைகளை அஞ்சாதவன்' என எழுதியிருக்கும் உரையும் நன். வி. சூ. 39. இங்கே அறிதற்பாலன. 2. (அ) "ஒன்றிநாம் பாட மறைநின்று கேட்டருளி" கலி. 41 : 41; (ஆ) "என்றியாம் பாட மறைநின்று கேட்டருளி" சிலப். (24) (பிரதிபேதம்) 1 பிணிகொண்டவன்.
|