| ஒருத்தி, வரியா ரகலல்குற் காழகம் | | ஒருத்தி, யரியார் ஞெகிழத் தணிசுறாத் தட்ப | | ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தா ளலவுற்று | | வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன் | | றண்டா ரகலம் புகும்; |
42 | ஒருத்தி, அடிதாழ் கலிங்கந் தழீஇ யொருகை | | முடிதா ழிருங்கூந்தல் பற்றிப்பூ வேய்ந்த | | கடிகயம் பாயு மலந்து; |
45 | ஒருத்தி, கணங்கொண் டவைமூசக் கையாற்றாள் பூண்ட | | மணங்கமழ் கோதை பரிபுகொண் டோச்சி | | வணங்குகாழ் வங்கம் புகும்; | | ஒருத்தி, இறந்த களியா னிதழ்மறைந்த கண்ணள் | | பறந்தவை மூசக் கடிவாள் கடியு | | மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை; | | ஆங்க, கடிகாவிற் காலொற்ற வொல்கி யொசியாக் | | கொடிகொடி தம்மிற் பிணங்கி யவைபோற் | | றெரியிழை யார்ப்ப மயங்கி யிரிவுற்றார் வண்டிற்கு | | வண்டலவர் கண்டே னியான்; |
55 | நின்னைநின் பெண்டிர் புலந்தனவு நீயவர் | | முன்னடி யொல்கி யுணர்த்தினவும் பன்மாண் | | கனவின் றலையிட் டுரையல் சினைஇயான் | | செய்வதி லென்பதோ கூறு; |
59 | பொய்கூறேன், அன்ன வகையால்யான் கண்ட கனவுதா | | னன்வாயாக் காண்டை நறுநுதால் பன்மாணுங் | | கூடிப் புணர்ந்தீர் பிரியன்மி னீடிப் | | பிரிந்தீர் புணர்தம்மி னென்பன போல | | வரும்பவிழ் பூஞ்சினை தோறு மிருங்குயி | | லானா தகவும் பொழுதினான் மேவர |
65 | நான்மாடக் கூடன் மகளிரு மைந்தருந் | | தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமா | | ரானா விருப்போ டணியயர்ப காமற்கு | | வேனில் விருந்தெதிர் கொண்டு. |
|
|
|