| பொருமுரண் மேம்பட்ட 1பொலம்புனை புகழ்நேமித் | 10 | (1) திருமறு மார்பன்போற் றிறல்சான்ற காரியு (2) மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதன் முக்கண்ணா னுருவேபோன் முரண்மிகுகுராலு மா(3)கடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர் வேல்வல்லா னிறனே போல் வெருவந்த வெருவந்த 2சேயு மாங்கப் | 15 | பொருவரும் பண்பி னவ்வையும் பிறவு முருவப்பல் கொண்மூக் குழீஇயவை போலப் புரிபு புரிபு புகுத்தனர் தொழூஉ |
1. "திருமறு மார்பநீ யருளல் வேண்டும்" பரி. 1 : 34.திருமறு - ஸ்ரீ வத்ஸம். 2. "உமையொடு புணர்ந்த விமையா நாட்டத்துக், கண்ணணங் கவிரொளிக் கடவுள்" பெருங். (1) 53 : 15 - 16. 3. (அ) "பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச், சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல்" திருமுருகு. 45 - 46. (ஆ) "பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச், சேயுயர்பிணிமுக மூர்ந்தம ருழக்கித், தீயழறுவைப்பத் திரியவிட் டெறிந்து, நோயுடை நுடங்குசீர் மாமுத றடிந்து, வென்றியின் மக்களுளொருமையொடு பெயரிய, கொன்றுண லஞ்சாக் கொடுவினைக் கொஃறகை, மாய வவுணர் மருங்கறத் தபுத்தவேல்" பரி. 5 : 1 - 7. (இ) ''கட்டுடைச் சூருடல் காமங்கொண்டு, பற்றியுட் புகுந்து பசுங்கடல் கண்டு, மாவொடுங் கொன்ற மணிநெடுந்திருவேற், சேவலங் கொடியோன்'' (ஈ) ''விண்ணுடைத் துண்ணும் கண்ணிலா வொருத்தன், மறிதிரைக் கடலுண் மாவெனக் கவிழ்ந்த, களவுடல் பிளந்த வொளிகெழு திருவேற், பணிப்பகை யூர்தி'' (உ) ''மேல்கடற் கவிழ்முகப் பொரியுடன் மாவு, நெடுங்கடற் பரப்பு மடுந்தொழி லரக்கரு, மென்னுளத் திருளு மிடைபுகுந் துடைத்த, மந்திரத் திருவேன் மறங்கெழு மயிலோன்'' ('ஊ) ''கடுவினை யங்குரங் காட்டியுள், ளழுக்கா, றெண்டிசைச் சாகைகொண் டிருண்மனம் பொதுளிக், கொடுங்கொலை வகுத்துக் கடும்பழிச் சடையலைந், திரண் டைஞ்ஞூறுதிரண்டவக்காவதஞ், சுற்றுடல் பெற்றுத் துணைப்பதினாயிர, மற்றதி னீண்டு மணியுடற் போகி, யைம்பது நூறுட னகன்றுசுற் றொழுக்கிப், பெருங்கவி ழிணர்தந் தவைகீழ்க் குலவிய, வடன்மாக் கொன்ற நெடுவேற் குளவன்'' கல். 11 : 4 - 7; 61 : 27 - 30; 73 : 2 - 5; 86 : 1 - 9. என்பவைகளும் (எ) ''நளியிரும் பரப்பின் மாக் (பிரதிபேதம்)1புலம்புனை, 2சேவுமாங்க.
|