பக்கம் எண் :

908கலித்தொகை

தெளிய விசும்பினு ஞாலத் தகத்தும்
வளியே யெதிர்போம் பலகதிர் ஞாயிற்
றொளியுள் வழியெல்லாஞ் சென்று முனிபெம்மை
யுண்மை நலனுண் டொளித்தானைக் காட்டீமோ
காட்டாயேன், மண்ணக மெல்லா மொருங்கு சுடுவேனென்
கண்ணீ ரழலாற் றெளித்து;
45 பேணான், துறந்தானை நாடு மிடம்விடா யாயிற்
பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப்
புறங்காலிற் போக விறைப்பேன் முயலி
னறம்புணை யாகலு முண்டு;
49 துறந்தானை, நாடித் தருகிற்பா யாயி னினக்கொன்று 
பாடுவே னொன்னோ யுரைத்து;
51  புல்லிய கேளிர் புணரும் பொழுதுணரே
னெல்லியா கெல்லையென் றாங்கே பகன்முனிவ
னெல்லிய காலை யிராமுனிவன் யானுற்ற
வல்லல் களைவர ரிலேன்;
55  ஒஒகடலே, தெற்றெனக்கண்ணுள்ளேதோன்றவிமையெடுத்துப்
பற்றுவே னென்றியான் விழிக்குங்கான் மற்றுமென்
னெஞ்சத்து ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யு மறனில் லவன்;
59  ஒஒகடலே, ஊர்தலைக் கொண்டு கனலுங் கடுந்தீயு
ணீர்பெய்தக் காலே சினந்தணியு மற்றிஃதோ
வீரமில் கேள்வ னுறீஇய காமத்தீ
நீருட் புகினுஞ் சுடும்;
63  ஒஒகடலே, எற்றமி லாட்டியென் னேமுற்றா ளென்றிந்நோ
யுற்றறியா தாரோ நகுக நயந்தாங்கே
யிற்றா வறியின் முயங்கலேன் மற்றென்னை
யற்றத்திட் டாற்றறுத்தான் மார்பு;
ஆங்கு;