13 | ஆர்வுற்றார் நெஞ்ச மழிய விடுவானோ வோர்வுற் றொருதிற மொல்காத நேர்கோ லறம்புரி நெஞ்சத் தவன்; | 16 | தண்ணறுங் கோங்கமலர்ந்த வரையெல்லாம் பொன்னணி யானைபோற்றோன்றுமே நம்மருளாக் கொன்னாள னாட்டு மலை; | 19 | கூருநோயேய்ப்ப விடுவானோ தன்மலை நீரினுஞ் சாய லுடையனயந்தோர்க்குத் தேரீயும் வண்கை யவன்; | 22 | வரைமிசைமேற்றொடுத்த நெய்க்க ணிறாஅன் மழைநுழை திங்கள்போற்றோன்று மிழைநெகிழ வெவ்வ முறீஇயினான் குன்று; | 25 | எஞ்சாதெல்லா கொடுமை நுவலாதி யஞ்சுவ தஞ்சா வறனிலியல்லனென் னெஞ்சம் பிணிக்கொண் டவன்; | 28 | என்றியாம்பாட மறைநின்று கேட்டனன் றாழிருங் கூந்தலென்றோழியைக் கைகவியாச் சாயலின் மார்பன் சிறுபுறஞ்சார்தர ஞாயிற்று முன்ன ரிருள்போல மாய்ந்ததென் னாயிழைமேனிப் பசப்பு. |
இது முன்பு பெற்றவழிமலிந்ததனைப் பின்பு பிரிந்தவழிக் கலங்கிக் கூறியது. என்னை? தலைவன் அருமைசெய்தயர்த்தவழித் தோழி தலைவியை ஆற்றுவித்தற்பொருட்டுத் தலைவனை இயற்பழிப்பத் தலைவி இயற்பட மொழிந்ததனைச் சிறைப்புறமாகக் கேட்டுத் தலைவன் முன்னொருகால்வந்து சிறுபுறஞ் சாரத் தான் ஆற்றினமை குறித்துப் பின்னொருகால் அவ்வாறு பாட அவன் சிறுபுறஞ்சாராமையிற் கலங்கி நெஞ்சொடு கூறியதாகலின். இதன் பொருள். (1)மறங்கொ ளிரும்புலித் தொன்முரண் டொலைத்த (2)முறஞ்செவி வாரண முன்குள கருந்திக்
1. (அ) "மறப்புலி" பதிற். 41 : 7 ; புறம். 90 : 3; சீவக. 752.(ஆ) "மறங்கொ ளிரும்புலி" சிலப். 12 : 28. 2. (அ) " முறஞ்செவி யானை" புறம். 339 : 13. (ஆ) "முறஞ்செவி வாரணம்" சிலப். 10 : 247. (இ) " முறஞ்செவி யானையும்" மணி.
|