12 | இனையிரு ளிதுவென வேங்கிநின் வரனசைஇ நினைதுய ருழப்பவள் பாடில்கட் பழியுண்டோ வினையளென் றெடுத்தரற்று மயன்முன்னர் நின்சுனைக் கனைபெய னீலம்போற் கண்பனி கலுழ்பவால் ; | 16 | பன்னாளும் படரடப் பசலையா லுணப்பட்டாள் பொன்னுரை மணியன்ன மாமைக்கட் பழியுண்டோ வின்னுரைச் செதும்பரற்றுஞ் செவ்வியு ணின்சோலை மின்னுகு தளிரன்ன மெலிவுவந் துரைப்பதால் ; எனவாங்கு ; | 21 | பின்னீதல் வேண்டுநீ பிரிந்தோணட் பெனநீவிப் பூங்கண் படுதலு மஞ்சுவ றாங்கிய வருந்துய ரவலந் தூக்கின் மருங்கறி வாரா மலையினும் பெரிதே. |
இது வரையாது வந்து ஒழுகுந் தலைவற்குத் தோழி தலைவியாற்றாமையும் இவ்வொழுக்கம் புறத்தார் அறியப்படுகின்றமையும் கூறி வரைவு கடாயது. இதன் பொருள். (1) | ்ஆமிழி (2) யணிமலை (3) யலர்வேங்கைத் தகைபோலத் தேமூசு நனைகவுட்டிசைகாவல் கொளற்கொத்த வாய்நில்லா (4)வலிமுன்பின் (5) வண்டூது புகர்முகப் படுமழை யடுக்கத்த மாவிசும் போங்கிய கடிமரத்துருத்திய (6) கமழ்கடாந் திகழ்தரும |
1. ஆம் - நீர். ஐங்குறு. 223. 2. நீர்வீழ்ச்சி, மலைக்கு அழகுசெய்யு மென்பதனை, கலி. 103 : 10 - 11. ஆம் அடிகளாலும் அவற்றின் குறிப்பாலும் உணர்க. 3. (அ) "தும்பி..................வேங்கையஞ் சினையென..............பூம்பொறியானைப் புகர்முகங் குறுகியும்" கலி. 49 : 2 - 4. (ஆ) "போதி யென்றான் பூத்த மரம்போற் புண்ணாற் பொலிகின்றான்" கம்ப. சம்பு. 43. 4. "வலிமுன்பின்" கலி. 4 : 1. 5. வண்டு யானை மதத்தில் மொய்க்குமென்பது "வரிவண், டோங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்றமாங்கவை விருந்தாற்றப் பகலல்கி" கலி. 66 : 2 - 4. என்னும் பகுதியாலும் அதன் குறிப்பாலும் உணரலாகும். 6. இந்நூற்பக்கம் 119 3- ஆங்குறிப்புப் பார்க்க.
|