5 | தீங்கதிர் விட்டது போல முகனமர்ந் தீங்கே வருவா ளிவள்யார்கொ லாங்கேயோர் வல்லவன் றைஇய பாவைகொ னல்லா ருறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொ லாண்டார் |
10 | கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற் பல்கலைச் சில்பூங் கலிங்கத்த ளீங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வ மகள்; இவளைச், சொல்லாடிக் காண்பேன் றகைத்து; நல்லாய் கேள்; |
15 | ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினல மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ; |
19 | நுணங்கமைத் திரளென நுண்ணிழை யணையென முழங்குநீர்ப் புணையென வமைந்தநின் றடமென்றோள் வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க் கணங்காகு மென்பதை யறிதியோ வறியாயோ; |
23 | முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயறுளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டா ருயிர்வாங்கு மென்பதை யுணர்தியோ வுணராயோ; எனவாங்கு; |
28 | பேதுற்றாய் போலப் பிறரெவ்வ நீயறியா யாதொன்றும் வாய்வாளா திறந்தீவாய் கேளினி நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப் பறையறைந் தல்லது செல்லற்க வென்னா விறையே தவறுடை யான் |