பல்கலைச் சில்பூங் கலிங்கத்த 1(1) ளீங்கிதோர் (2) நல்கூர்ந்தார் செல்வ 2மகள் |
எ - து; ஊரிடத்தே வளர்ந்த இளமரக்காவினுள் நீரோடுகின்ற காலிடத்தே நின்ற கொழுவிய நிழலையுடைய ஞாழலினது முதிர்ந்ததொத்துக்களைப் பறித்துக்கொண்டு, பூவும் மயிருந் தம்முண் (3) மயங்கும்படிமுடித்து வாரிமுடிக்கும்படி தலைகூடினமயிர் தோட்கட்டிலே, தாதோடே சிறிது குலைந்து வீழ, நிறைந்த (4)மதி இனிய கதிர்களை விட்டாற்போல முகம் ஒளிபொருந்தி, யான் நிற்கின்ற இவ்விடத்தே வருவாளாகிய இவள் யார்தான்? (5) கொல்லிமலையிலே வல்லவனாலே பண்ணப்பட்ட ஒப்பில்லாத பாவையோ? அன்றி அய
1. (அ) காதற் சொல்லுக்கு "ஈங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வமகள்" என்பதை மேற்கோள்காட்டி, இதனுள் 'இது வென்பது காதல் பற்றிவந்தது' என்பர் தெய்வச்சிலையார்; தொல். கிளவி. சூ. 55. 'குடிமை' 2. "நல்கூர்ந்தார் செல்வமகள்" கலி. 50 : 14. 3. தொல். உரி. சூ. 53. உரையில் இவ்வுரைகாரர், "கழுமமுடித்துக் கண்கூடு கூழை" என்பதனை மேற்கோள் காட்டி, கழுமென்னும் உரிச்சொல் திரட்சியை உணர்த்துதல், 'கூறிய கிளவி ' என்பதனாற் கொள்க வென்று வேறு பொருளெழுதி யிருக்கிறார். இ - வி. உரைகாரரும் திரட்சி என்னும் பொருளில்வருதற்கே மேற். காட்டினர். இ-வி. சூ. 290. 4. "மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற், காதலை வாழி மதி" (குறள். 1118) என மாறிவருதலுங் காண்க. 5. (அ) "கொல்லிக் குடவரைப், பூதம் புணர்த்த புதிதியல் பாவை, விரிகதி ரிளவெயிற் றோன்றி யன்னநின், னாய்நலம்" நற், 192 : 8 - 11. (ஆ) "கொல்லிக், கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய, நல்லியற் பாவை யன்னவிம், மெல்லியற் குறுமகள்" (இ) "கொல்லிக் குடவரைப், பாவையின் மடவந்தனளே" குறுந். 89, 100. (ஈ) "கொல்லி, யொளிறுநீ ரடுக்கத்து வியலகம் பொற்பக், கடவுளெழுதிய பாவையின், மடவது மாண்ட மாஅ யோளே" (உ) "கொல்லி, நிலைபெறு கடவு ளாக்கிய, பலர்புகழ் பாவை யன்னநின்னலனே" அகம். 62: 13 - 16, 209 : 15 - 7. என்பவற்றாற் கொல்லிப்பாவை தன் பேரழகினால் அழகிய மகளிர்க்கு உவமைகூறப்படுதல் தெற்றென விளங்கும். (ஊ) "செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை, செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றியன்ன, செய்யர்" மது. 410, 12. (எ) "தாவி னன்பொன் றைஇய பாவை, விண்டவ ழிளவெயில் கொண்டுநின் றன்ன, மிகுகவி னெய்திய...............அரிவையை" அகம். 212 : 1 - 8. என்பவற்றிற் குறித்த பொற்பாவையும் (ஏ) "பாவை யன்னவென் னாய்தொடி மடந்தை" ஐங். 389. (ஐ) "பாவை யன்ன மகளிர்" பதிற். 88 : 29. (ஒ) "பாவை யன்ன பலராய் மாண்கவின், பண்டையிற் சிறக்கவென் (பிரதிபேதம்)1இங்கீதோர், 2மகள் இவளைச்...................நல்லாய்கேள எ - து. ஊரிடத்தே.
|