பக்கம் எண் :

546கலித்தொகை

5 துயங்கி யிருந்தார்க் குயர்ந்த பொருளு
 மரிதி னறஞ்செய்யா வான்றோ ருலகு
 முரிதி னொருதலை யெய்தலும் வீழ்வார்ப்
 பிரிதலு மாங்கே புணர்தலுந் தம்மிற்
 றருத நகையாதான் மற்று;

 

10 நனவினாற் போலு நறுநுதா லல்கற்
 கனவினாற் சென்றேன் கலிகெழு கூடல்
 வரையுறழ் நீண்மதில் வாய்சூழ்ந்த வையைக்
 கரையணி காவி னகத்து;

 

14உரையினி, தண்டாத்தீஞ் சாய னெடுந்தகா யவ்வழிக்
 கண்ட தெவன்மற்று நீ;

 

16கண்டது, உடனம ராயமொ டவ்விசும் பாயு
 மடநடை மாயின மந்தி யமையத்
 திடன்விட் டியங்கா விமையத் தொருபா
 லிறைகொண் டிருந்தன்ன நல்லாரைக் கண்டேன்
 றுறைகொண் டுயர்மணன் மேல்; ஒன்றி நிறைவதை

 

21 ஓர்த்த திசைக்கும் பறைபோனின் னெஞ்சத்து
 வேட்டதே கண்டாய் கனா;

 

23 கேட்டை, விரையனீ மற்று வெகுள்வா யுரையாண்
 டிதுவாகு மின்னகை நல்லாய் பொதுவாகத்
 தாங்கொடி யன்ன தகையா ரெழுந்ததோர்
 பூங்கொடி வாங்கி யிணர்கொய்ய வாங்கே
 சினையலர் வேம்பின் பொருப்பன் பொருத
 முனையரண் போல வுடைந்தன்றக் காவிற்
 றுனைவரி வண்டி னினம்;

 

30 மற்றாங்கே, நேரிணர் மூசிய வண்டெல்லா மவ்வழிக்
 காரிகை நல்லார் நலங்கவர்ந் துண்பமோ லோராங்கு மூச (1)
 அவருள்,
 ஒருத்தி, செயலமை கோதை நகை
 ஒருத்தி, யியலார் செருவிற் றொடியொடு தட்ப

 

35 ஒருத்தி, தெரிமுத்தஞ் சேர்ந்த திலகம்
 ஒருத்தி, யரிமா ணவிர்குழை யாய்காது வாங்க

1. இஃது ஆறுமெய்பெற்றதென்பதனால் இவ்வாறு பிரிக்கப்பட்டது.