| பண்டின்னை யல்லைமன் னீங்கெல்லி வந்தீயக் கண்ட தெவன்மற் றுரை; |
5 | நன்றும், தடைஇய மென்றோளாய் கேட்டீவா யாயி னுடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங் கடவுளர் கட்டங்கி னேன்; |
8 | சோலை, மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ கடவுண்மை கொண்டொழுகு வார்; |
10 | அவருள், எக்கடவுண் மற்றக் கடவுளைச் செப்பீமன் முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கா லிப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய வக்கடவுண் மற்றக் கடவு ளதுவொக்கும் நாவு ளழுந்து தலைசாய்த்து நீகூறு மாயமோ கைப்படுக்கப் பட்டாய்நீ கண்டாரை வாயாக யாங்கூற வேட்டீவாய் கேளினி; |
17 | பெறனசை வேட்கையி னின்குறி வாய்ப்பப் பறிமுறை நேர்ந்த நகாராகக் கண்டார்க் கிறுமுறை செய்யு முருவொடு நும்மிற் செறிமுறை வந்த கடவுளைக் கண்டாயோ; |
21 | நறுந்தண் டகரமு நானமு நாறு நெறிந்த குரற்கூந்த னாளணிக் கொப்ப நோக்கிற் பிணிகொள்ளுங் கண்ணொடு மேனாணீ பூப்பலி விட்ட கடவுளைக் கண்டாயோ; |
25 | ஈரணிக்கேற்ற வொடியாப் படிவத்துச் சூர்கொன்ற செவ்வேலாற் பாடிப் பலநாளு மாராக் கனைகாமங் குன்றத்து நின்னொடு மாரி யிறுத்த கடவுளைக் கண்டாயோ; |
29 | கண்ட கடவுளர் தம்முளு நின்னை வெறிகொள் வியன்மார்பு வேறாகச் செய்து குறிகொளச் செய்தார்யார் செப்புமற் றியாருஞ் சிறுவரைத் தங்கின் வெகுள்வர் செறுதக்காய் தேறினேன் சென்றீநீ செல்லா விடுவாயே னற்றா ரகலத்துக் கோர்சார மேவிய |