(95). | நில்லாங்கு நில்லாங் கிவர்தர லெல்லாநீ நாறிருங் கூந்தலா ரிற்செல்வா யிவ்வழி யாறு மயங்கினை போறிநீ வந்தாங்கே மாறினி நின்னாங்கே நின்சே வடிசிவப்பச் செறிந்தொளிர் வெண்பல்லா யாம்வே றியைந்த குறும்பூழ்ப்போர் கண்டே மனைத்தல்ல தியாது மறிந்ததோ வில்லைநீ வேறோர்ப் பது; |
8 | குறும்பூழ்ப்போர்கண்டமை கேட்டே னீயென்றும் புதுவன வீகை வளம்பாடிக் காலிற் பிரியாக் கவிகைப் புலையன்றன் யாழி னிகுத்த செவிசாய்த் தினியிளிப் பட்டன வீகைப்போர் கண்டாயும் போறிமெய் யெண்ணிற் றபுத்த புலர்வில புண். |
14 | ஊரவர்கவ்வை யுளைந்தீயா யல்கனின் றாரின்வாய்க் கொண்டு முயங்கிப் பிடிமாண்டு போர்வாய்ப்பக் காணினும் போகாது கொண்டோடும் பார்வைப்போர் கண்டாயும் போறிநின் றோண்மேலா மீரமாய் விட்டன புண்; |
19 | கொடிற்றுப்புண்செய்யாது மெய்ம்முழுதுங் கையிற் றுடைத்துநீ வேண்டினும்வெல்லாது கொண்டோடு மொட்டியபோர் கண்டாயும் போறி முகந்தானே கொட்டிக் கொடுக்குங் குறிப்பு; |
23 | ஆயி னாயிழா யன்னவை யானாங் கறியாமை போற்றிய நின்மெய் தொடுகு; |
25 | அன்னையோ, மெய்யைப்பொய் யென்று மயங்கிய கையொன் றறிகல்லாய் போறிகா ணீ; |
27 | நல்லாய், பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தே னருளினி; |
29 | அருளுகம் யாம்யாரே மெல்லா தெருள வளித்துநீ பண்ணிய பூழெல்லா மின்னும் விளித்துநின் பாணனோ டாடி யளித்தி |