பக்கம் எண் :

மூன்றாவது மருதம்577

விடலைநீ நீத்தலி னோய்பெரி தேய்க்கு
நடலைப்பட் டெல்லாநின் பூழ்.

இது “கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது, நல்லிசை நயந்தோர் 1சொல்லொடு தொகைஇப், பகுதியி னீங்கிய தகுதிக்கண்” (1) தலைவி (2) பரத்தையரைப் (3) பூழாக்கிக் கூறியது.

இதன் பொருள்.

நில்லாங்கு நில்லாங் கிவர்தர லெல்லாநீ
நாறிருங்கூந்தலா ரிற்செல்வா (4) 2யிவ்வழி
யாறுமயங்கினை போறிநீ வந்தாங்கே
மாறினி நின்னாங்கே நின் (5) 3சேவடிசிவப்ப

எ - து: ஏடா! நீ நாறுகின்ற கரிய கூந்தலையுடைய பரத்தையரில் லின்கட் 4செல்கின்றாயாய் இவ்விடத்துப்போகின்றவழி தப்பிவந்தாய்போலே இருந்தாய்; நீ இவ்விடத்துப் பரந்து பாராதேகொள்; 5அவ்விடத்தே நில், அவ்விடத்தே நில்; இனி நின்னுடைய பரத்தையர் மனைக்கண்ணே நின் (6) சிவந்த அடி மிகச் சிவக்கும்படி 6வந்தாற்போலப் போவென்றாள். எ - று.

செறிந்தொளிர் வெண்பல்லா யாம்வேறியைந்த
(7) 7குறும்பூழ்ப்போர் கண்டேமனைத்தல்ல தியாது
மறிந்ததோ வில்லைநீ வேறோர்ப் பது.


1. தொல். கற்பியல். சூ. 6.

2. "காவற் பாங்கின் ஆங்கோர் பக்கத்திற் றலைவன் கூறியவற்றைக் கற்பியலுள் தலைவன் பகுதியினீங்கிய தகுதிக்கண், தலைவி பரத்தையராகக் கூறுவனவும் இச்சூத்திரத்தானமைக்க. அவை மருதக்கலியுட் கடவுட்பாட்டு முதலியன. அவற்றை ஆண்டுக்காட்டுதும் கண்டுணர்க" என்பது ஈண்டும் அறியத்தக்கது; தொல். அகத். சூ. 45. நச்.

3. "கானமர் புள்ளும்..............எங்கையரே" அம்பிகாபதி. 510.

4. "எம்மனை, வாரனீ வந்தாங்கே மாறு" கலி. 89 : 2 - 3.

5. "கண் சிவந்தில கால்கள் சிவந்தவே" "ஐவர் தூதுசென்று, பாதாம் புயஞ் சிவந்தான்".

6. "செவ்விரல் சிவப்பூர" (கலி. 76 : 6) என்பதும் அதன் உரையும் குறிப்பும் பார்க்க.

7. (அ) குறும்பூழ் மருதத்திற்குமுரித்தென்பது, "நாடொறுங், கையுளதாகி விடினுங் குறும்பூழ்க்குச், செய்யுள தாகு மனம்" என்பதனாலும்

(பிரதிபேதம்) 1சொல்லொடுந்தொகைஇ, 2அவ்வழி, 3சீறடி, 4செல்கின்ற நீ இவ்விடத்து, 5அவ்விடத்தேநில் இனி, 6வந்தாப்போலே போ, 7குறும்பூட்போர்.