(101). | தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமுங் களிபட்டா னிலையேபோற் றடவுபு துடுப்பீன்று ஞெலிபுட னிரைத்த ஞெகிழிதழ்க் கோடலு |
5 | மணிபுரை யுருவின காயாவும் பிறவு மணிகொள மலைந்த கண்ணியர் தொகுபுடன் மாறெதிர் கொண்டதம் மைந்துட னிறுமார் சீறரு முன்பினோன் கணிச்சிபோற் கோடுசீஇ யேறுதொழூஉப் புகுத்தன ரியைபுட னொருங்கு; |
10 | அவ்வழி. முழக்கென விடியென முன்சமத் தார்ப்ப வழக்குமாறு கொண்டு வருபுவரு பீண்டி நறையொடு துகளெழ நல்லவ ரணிநிற்பத் துறையு மாலமுந் தொல்வலி மராஅமு முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ; |
15 | மேற்பாட் டுலண்டி னிறனொக்கும் புன்குருக்க ணோக்கஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக் கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் றோற்றங்கா |