பக்கம் எண் :

618கலித்தொகை

ணஞ்சீ ரசையியல் கூந்தற்கை நீட்டியா
னெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவட்டன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்;
21சுடர்விரிந் தன்ன சுரிநெற்றிக் காரி
விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடிக்
குடர்சொரியக் குத்திக் குலைப்பதன் றோற்றங்காண்
படரணி யந்திப் பசுங்கட் கடவு
ளிடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக்
குடர்கூளிக் கார்த்துவான் போன்ம்;
27செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளைக்
கதனஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாடி
நுதிநுனைக் கோட்டாற் குலைப்பதன் றோற்றங்கா
ணாரிரு ளென்னா னருங்கங்குல் வந்துதன்
றாளிற் கடந்தட்டுத் தந்தையைக் கொன்றானைத்
தோளிற் றிருகுவான் போன்ம்;
எனவாங்கு;
34அணிமாலைக் கேள்வற் றரூஉமா ராயர்
மணிமாலை யூதுங் குழல்;
36கடாஅக் களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை
விடாஅதுநீ கொள்குவை யாயிற் படாஅகை
யீன்றன வாயமக டோள்;
39பகலிடக் கண்ணியன் பைதற் குழலன்
சுவன்மிசைக் கோலசைத்த கைய னயலது
கொல்லேறு சாட விருந்தார்க்கெம் பல்லிருங்
கூந்த லணைகொடுப்பேம் யாம்;
43கோளாள ரென்னொப்பா ரில்லென நம்மானுட்
டாளாண்மை கூறும் பொதுவ னமக்கொருநாட்
கோளாள னாகாமை யில்லை யவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்;