பக்கம் எண் :

நான்காவது முல்லை651

55பாடேற்றுக் கொள்பவர் பாய்ந்துமே லூர்பவர்
கோடிடை நுழைபவர் கோட்சாற்று பவரொடு
புரிபுமேற் சென்ற நூற்றுவர் மடங்க
வரிபுனை வல்வி லைவ ரட்ட
பொருகளம் போலுந் தொழூஉ;
60தொழுவினுள், கொண்டவே றெல்லாம் புலம்புகத் தண்டாச்சீர்
வாங்கெழி னல்லாரு மைந்தரு மல்லலூ
ராங்க ணயர்வர் தழூஉ;
63பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக்
கோடு குறிசெய்த மார்பு;
65நெற்றிச் சிவலை நிறையழித்தா னீண்மார்பிற்
செற்றார்கண் சாயயான் சாரா தமைகல்லேன்
பெற்றத்தார் கவ்வை யெடுப்ப வதுபெரி
துற்றீயா ளாயர் மகள்;
69தொழீஇஇ, ஒருக்குநா மாடுங் குரைவையு ணம்மை
யருக்கினான் போனோக்கி யல்லனோய் செய்தல்
குரூஉக்கட் கொலையேறு கொண்டேன்யா னென்னுந்
தருக்கன்றோ வாயர் மகன்;
73நேரிழாய், கோளரி தாக நிறுத்த கொலையேற்றுக்
காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரலரெடுத்த
வூராரை யுச்சி மிதித்து;
77ஆங்கு;
தொல்கதிர்த் திகிரியாற் பரவுது மொல்கா
வுருமுறழ் முரசிற் றென்னவற்
கொருமொழி கொள்கவிவ் வுலகுட னெனவே

இது "நாடகவழக்கினும்" என்னும் (1) சூத்திரத்துப்"பாடலுளமையாத" என்றதனால் ஏறுதழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி,


1. தொல். அகத். சூ. 53. இச்சூத்திரத்தின் இவருரையினும் இச்செய்யுள் மேற்கோளாக இக்குறிப்பு, சிறிது வேறபாட்டோடுவிளக்கமாக உளது.