பக்கம் எண் :

நான்காவது முல்லை661

60 தொழுவினுள், கொண்டவே றெல்லாம் புலம்புகத் தண்டாச்சீர்
வாங்கெழி னல்லாரு மைந்தரு மல்லலூ
ராங்க ணயர்வர் தழூஉ

எ - து : அத்தொழுவிடத்துத் தழுவிக்கொண்ட ஏறுகளெல்லாம் மேயும் நிலத்தேபோக அமையாத சீரினையும் நோக்கினார் கண்ணை வாங்கிக்கொள்ளும் 1அழகினையுமுடைய ஆய்ச்சியரும் ஆயரும் வளப்பத்தையுடைய ஊரிடத்தே குரவையாடுவரெனத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறினாள். எ - று.

93 பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக்
கோடு குறிசெய்த மார்பு

எ - து : கூறி, பொதுவனுடைய கொலைத்தொழிலையுடைய ஏற்றினுடைய கொம்புகள் குறியிட்டுவிட்ட மார்பைப் பாடுவேமாக வாருங்கோளெனத் தலைவி யையும் ஆயத்தையும் நோக்கிக் கூறினாள். எ - று.

65நெற்றிச் சிவலை 2நிறையழித்தா னீண்மார்பிற்
செற்றார்கண் சாயயான் சாரா தமைகல்லேன்
பெற்றத்தார் கவ்வை யெடுப்ப வதுபெறி
துற்றீயா ளாயர் மகள்

எ - து : அதுகேட்ட தலைவி, நெற்றியிலே சிவந்த சுட்டியினையுடைய ஏற்றைவிரவி நிறைதலைக்கெடுத்தவனுடைய நீண்ட மார்பிலே பகைத்து அலர் கூறுகின்ற மகளிர் நம்மை இகழ்ந்து பார்க்குங் கண்கள் இகழ்ந்து பாராதிருக் கும்படியாக யான் சாராமல் அமைந்திரேன்; இனி, பசுவையுடைய ஆய்ச்சியர் அலர்கூறுவதற்குப் பெரிதும் வருத்தமுறேன் யானென்றாள். எ - று.

ஆயர்மகளென்று தன்னைப் பிறர்போற் கூறினாள்.

69 (1) தொழீ இஇ

எ - து : தொழில் செய்கின்றவளே. எ - று.

(2)
(3)
ஒருக்குநா மாடுங் குரவையு ணம்மை
யருக்கினான் போனோக்கி யல்லனோய் செய்தல்


1. இந்நூற்பக்கம் 644 : 1-ஆம் குறிப்புப் பார்க்க.

2. புகுமுகம்புரிதல் கைக்கிளைக்கண் வந்ததற்கு, ''ஒருக்குநாம்...............மகன்'' என்னும், பகுதி மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 19. பேர். இ - வி. சூ. 580.

3. ''அருக்கு மங்கையர் மலரடி'' திருப்புகழ்.

(பிரதிபேதம்) 1அழகினையுடைய, 2நிறையழித்த நீண்மார்பிற் சென்றார்.