பக்கம் எண் :

662கலித்தொகை

(1)குரூஉக்கட் கொலையேறு கொண்டேன்யா னென்னுந்
தருக்கன்றோ வாயர் மகன்

எ- து : ஆயர்மகன் ஆயத்தோடே நாம் ஆடுங் குரவைக்கூத்திலே நம்மை அருமைசெய்தான்போலே நோக்கி நமக்கு வருத்தத்தைத் தரும் நோயைச் செய்தல் 1நிறத்தையுடைய கண்ணையுடைய கொலையேற்றையான் கொண்டே னென்னும் மனச்செருக்கன்றோ? அது வேறொன்றல்லவே என்றாள். எ - று.

73நேரிழாய், 2கோளரி தாக நிறுத்த கொலையேற்றுக்
காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரலரெடுத்த
வூராரை (2) யுச்சி மிதித்து

எ - து : அதுகேட்ட தோழி, ஒத்த இழையினையுடையாய்! கொள்ளு தலரிதாக நஞ்சுற்றத்தார் நிறுத்தின கொலைத்தொழிலையுடைய ஏறாகிய காரியினது கோபத்திற்கு அஞ்சானாய்த் தழுவின பொதுவனுக்கே எம்முடைய சுற்றத்தார் 3மகிழ்ச்சிநிறைதலுற்று அலரை மிகக் கூறிய ஊரிலுள்ளாரைத் தலையிலே மிதித்துக் கொடுத்தலைப்பொருந்தினார்; இனி வருந்தாதே கொள்ளென்றாள். எ - று.

4எமரென்றாள்; ''தாயத்தினடையா'' என்னும் (3) சூத்திரவிதியால். அவர் அலர் கூறிய அவற்கே கொடுத்தலின், அவர் உச்சியிலே மிதித்த தன்மைத் தென்றாள்.

77


(5)
ஆங்கு
தொல்கதிர்த் திகிரியாற் பரவுது மொல்கா
வுருமுறழ் (4) முரசிற் றென்னவற்
கொருமொழி கொள்கவிவ் வுலகுட 5னெனவே


1. ''குரூஉக்கட் கொலையேறு'' கலி. 104 : 23.

2. உச்சியிலே மிதித்தலென்றது இழிவுபடுத்துதலை : ''மதித்திறப் பாரு மிறக்க மதியா, மிதித்திறப்பாரு மிறக்க'' என்பது; நாலடி. 61.

3. தொல். பொருளி. சூ. 27.

4. பாண்டியற்கு முரசாற் சிறப்புக் கூறுதலை. ''முரசுமூன் றாள்பவர்'' (கலி. 132 : 4) என்பனாலும் அதன் குறிப்பாலும் அறிக.

5. ''குமரியொடு வடவி மயத், தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதற்கு'' சிலப். 29.

(பிரதிபேதம்)1நிறத்தையுடைத்தாகிய, 2கோளரியாக, 3மகிட்சி, 4எமரென்றாள் தாய் தாயத்தி, 5என்னவே.