பக்கம் எண் :

678கலித்தொகை

6அவ்வழி,
நீறெடுப்பவை நிலஞ்சாடுபவை
மாறேற்றுச் சிலைப்பவை மண்டிப்பாய் பவையாய்த்
துளங்கிமி னல்லேற் றினம்பல களம்புகு
மள்ளர் வனப்பொத் தன;
11தாக்குபு தம்முட் பெயர்த்தொற்றி யெவ்வாயும்
வைவாய் மருப்பினான் மாறாது குத்தலின்
மெய்வார் குருதிய வேறெல்லாம் பெய்காலைக்
கொண்ட னிரையொத் தன;
அவ்வேற்றை;
16பிரிவுகொண் டிடைப்போக்கி யினத்தோடு புனத்தேற்றி
யிருதிறனா நீக்கும் பொதுவ
ருருகெழு மாநில மியற்றுவான்
விரிதிரை நீக்குவான் வியன்குறிப் பொத்தனர்;
20அவரைக், கழல வுழக்கி யெதிர்சென்று சாடி
யழல்வாய் மருப்பினாற் குத்தி யுழலை
மரத்தைப்போற் றொட்டன வேறு;
23தொட்டதம், புண்வார் குருதியாற் கைபிசைந்து மெய்திமிரித்
தங்கார் பொதுவர் கடலுட் பரதவ
ரம்பியூர்ந் தாங்கூர்ந்தா ரேறு;
26ஏறுதங், கோலஞ்செய் மருப்பினாற் றோண்டிய வரிக்குடர்
ஞாலக்கொண் டெழூஉம் பருந்தின் வாய்வழீஇ
யாலுங் கடம்பு மணிமார் விலங்கிட்ட
மாலைபோற் றூங்குஞ் சினை;
ஆங்கு;
31தம்புல வேறு பரத்தர வுய்த்தத
மன்புறு காதலர் கைபிணைந் தாய்ச்சிய
ரின்புற் றயர்வர் தழூஉ;
34முயங்கிப் பொதிவே முயங்கிப் பொதிவே
முலைவேதி னொற்றி முயங்கிப் பொதிவேங்
கொலையேறு சாடிய புண்ணையெங் கேளே;