(118). | வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தா னல்லாற்றி னுயிர்காத்து நடுக்கறத் தான்செய்த தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போற் பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர |
5 | வானாது கலுழ்கொண்ட வுலகத்து மற்றவ னேனையா னளிப்பான்போ லிகலிருண் மதிசீப்பக் குடைநிழ லாண்டாற்கு மாளிய வருவாற்கு மிடைநின்ற காலம்போ லிறுத்தந்த மருண்மாலை; |
9 | மாலைநீ, தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த போதுபோற் குவிந்தவென் னெழினல மெள்ளுவா யாய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போற் றளைவிட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்; |
13 | மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழ லிசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய் செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார் பாராட்டும் பொய்தீர்ந்த புணர்ச்சியிட் புதுநலங் கடிகல்லாய்; |
17 | மாலைநீ, தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப் பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மைபா ராட்டுவாய் |