10 | மாலைநீ,உள்ளங்கொண்டகன்றவர் துணைதாராப்பொழுதின்கண் வெள்ளமா னிறநோக்கிக் கணைதொடுக்குங் கொடியான்போ லல்லற்பட் டிருந்தாரை யயர்ப்பிய வந்தாயோ; | 13 | மாலைநீ, ஈரமில் காதல ரிகந்தருளா விடனோக்கிப் போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போ லாரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ; | 19 | மாலைநீ, கந்தாதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண் வெந்ததோர் புண்ணின்கண் வேல்கொண்டு நுழைப்பான்போற் காய்ந்தநோ யுழப்பாரைக் கலக்கிய வந்தாயோ; எனவாங்கு; | 20 | இடனின்றலைத்தரு மின்னாசெய் மாலை துனிகொ டுயர்தீரக் காதலர் துனைதர மெல்லியான் பருவத்து மேனின்ற கடும்பகை யொல்லென நீக்கி யொருவாது காத்தோம்பு நல்லிறை தோன்றக் கெட்டாங் கில்லா கின்றா லிருளகத் தொளித்தே. |
இது பிரிவிடையாற்றுத தலைவி மாலைப்பொழுதுகண்டு கழிய ஆற்றாளாயின இடத்துத் தலைவன்வரவும் அவளது அகமலர்ச்சியுங் கண்டார் கூறியது. இதன் பொருள். | அருடீர்ந்த காட்சியா னறனோக்கா 1னயஞ்செய்யான் வெருவுற வுய்த்தவ னெஞ்சம்போற் பைபய விருடூர்பு புலம்பூரக் (1) கனைசுடர் கல்சேர வுரவுத்தகை (2) மழுங்கித்தன் னிடும்பையா லொருவனை | 5 | யிரப்பவனெஞ்சம்போற் புல்லென்று புறமாறிக் கரப்பவ னெஞ்சம்போன் மரமெல்லா மிலைகூம்பத் |
1. (அ) "கனைசுடர் கல்சேர்பு மறைய" அகம். 47 : 9. (ஆ) "படுசுடர் கல்சேர" (இ) "ஒண்சுடர் கல்சேர" (ஈ) "கல்சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்" கலி. 116 : 2, 121 : 1, 134 : 4. 2. மழுங்க லென்பது ‘மழுகல்’ எனவும் ‘மாழ்கல்’ எனவும் வழங்கும். (பிரதிபேதம்)1அறஞ்செய்யான், பயஞ்செய்யான்.
|