பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்779

புலந்தழப் புல்லாது விடுவா
யிலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காணீ;
16இன்மணிச் சிலம்பிற் சின்மொழி யைம்பாற்
பின்னொடு கெழீஇய தடவர வல்கு
னுண்வரி வாட வாராது விடுவாய்
தண்ணந் துறைவ தகாஅய் காணீ;

எனவாங்கு;

21அனையளென் றளிமதி பெரும நின்னின்
றிறைவரை நில்லா வளைய ளிவட்கினிப்
பிறையேர் சுடர்நுதற் பசலை
மறையச் செல்லுநீ மணந்தனை விடினே.

இது வரைவுநீட ஆற்றாத தலைவிநிலைமை தலைவற்குத் தோழி கூறி அவனை நெருங்கி வரைவுகடாயது.

இதன் பொருள்.

(1) கண்டவ ரில்லென 1வுலகத்து ளுணராதார்
தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளு
ணெஞ்சறிந்த கொடியவை 2மறைப்பினு மறிபவர்
நெஞ்சத்துக் குறுகய கரியில்லை யாகலின்
வண்பரி நவின்ற வயமான் செல்வ
நன்கதை யறியினு நயனில்லா (2) நாட்டத்தா
லன்பிலை யெனவந்து கழறுவ லையகேள்


1. (அ) “தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின், றன்னெஞ்சே தன்னைச் சுடும்” என்னுங் குறளின் உரையில் நெஞ்சு கரியாதற்கு, “கண்டவ ரில்லென.........கரியில்லை யாகலின்” என்னும் அடிகளை மேற்கோள்காட்டி, ‘பொய்மறையாமையின் அது கூறலாகாதென்பது இதனாற் கூறப்பட்டது’ என்பர், பரி; குறள், 293. (ஆ) “தன்னைத்தன் னெஞ்சங் கரியாகத் தானடக்கிற், பின்னைத்தானெய்தா நலனில்லை” அறநெறி. 207. (இ) “வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும், வஞ்சித்தோமென்று மகிழன்மின் வஞ்சித்த, வெங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி, யங்கங் குலைவ தறிவு” நீதிநெறி. 94. என்பவை இங்கே அறிதற்பாலன.

2. நாட்டம் - ஆராய்ச்சி, புறம். 35 : 14, 70 : 11.

(பிரதிபேதம்)1உலகத்துணராதார், 2மறைப்பவு மறையாவா னெஞ்சத்திற் குறுகிய.