10 | வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவேன் பாய்மா நிறுத்து; |
14 | யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு; |
18 | உய்யா வருநோய்க் குயவாகு மைய லுறீஇயா ளீத்தவிம் மா; |
20 | காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு மாணிழை மாதரா ளேஎரெனக் காமன தாணையால் வந்த படை; |
24 | காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம மெழினுத லீத்தவிம் மா; |
26 | அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும் வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு; |
30 | அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற நேரிழை யீத்தவிம் மா; ஆங்கதை; |
33 | அறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென் றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே |
இது மடலேறுகின்ற தலைவன் சான்றோர்க்குக் கூறியது.