| னின்னுயி ரன்னாற் கெனைத்தொன்றுந் தீதின்மை யென்னுயிர் காட்டாதோ மற்று; |
22 | பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவேன் வந்தேனென் னெஞ்ச மழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை யொழிய விடாதீமோ வென்று; |
27 | அழிதக, மாஅந் தளிர்கொண்ட போழ்தினா னிவ்வூரார் தாஅந் தளிர்சூடித் தந்நலம் பாடுப வாஅந் தளிர்க்கு மிடைச்சென்றார் மீடரின் யாஅந் தளிர்க்குவே மன்; |
31 | நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்றோட் பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற் றொய்யி லெழுதவும் வல்லன்றன் கையிற் சிலைவல்லான் போலுஞ் செறிவினா னல்ல பலவல்லன் றோளாள் பவன்; |
36 | நினையுமென் னுள்ளம்போ னெடுங்கழி மலர்கூம்ப வினையுமென்னெஞ்சம்போ லினங்காப்பார்குழறோன்றச் சாயவென் கிளவிபோற் செவ்வழியா ழிசைநிற்பப் போயவென் னொளியேபோ லொருநிலையே பகன்மாயக் காலன்போல் வந்த கலக்கத்தோ டென்றலை மாலையும் வந்தன் றினி; |
42 | இருளொடியா னீங்குழப்ப வென்னின்றிப் பட்டா யருளிலை வாழி சுடர்; |
44 | ஈண்டுநீர் ஞாலத்து ளெங்கேள்வ ரில்லாயின் மாண்ட மனம்பெற்றார் மாசி றுறக்கத்து வேண்டிய வேண்டியாங் கெய்துதல் வரயெனின் யாண்டு முடையே னிசை; |
48 | ஊரலர் தூற்றுமிவ் வுய்யா விழுமத்துப் பீரலர் போலப் பெரிய பசந்தன |