| வன்னமென் சேக்கையு ளாரா தளித்தவன் |
5 | றுன்னி யகலத் துறந்த வணியளாய் நாணு நிறையு முணர்கல்லா டோண்ஞெகிழ்பு பேரம ருண்க ணிறைமல்க வந்நீர்தன் கூரெயி றாடிக் குவிமுலைமேல் வார்தரத் தேர்வழி நின்று தெருமரு மாயிழை கூறுப கேளாமோ சென்று; |
11 | எல்லிழாய், ஏற்றி வரைந்தானை நாணு மறந்தாளென் றுற்றனிர் போல வினவுதிர் மற்றிது கேட்டீமி னெல்லீரும் வந்து; |
14 | வறந்தெற மாற்றிய வானமும் போலு நிறைந்தென்னை மாய்ப்யதோர் வெள்ளமும் போலுஞ் சிறந்தவன் றூவற நீப்பப் பிறங்கிவந் தென்மே னிலைஇய நோய்; |
18 | நக்கு நலனு மிழந்தா ளிவளென்னுந் தக்கவிர் போலு மிழந்திலேன் மன்னோ மிக்கவென் னாணு நலனுமென் னுள்ளமு மக்கா லவனுழை யாங்கே யொழிந்தன வுக்கா ணிஃதோ வுடம்புயிர்க் கூற்றாகச் செக்கரம் புள்ளித் திகிரி யலவனொடியா னக்கது பன்மா ணினைந்து; |
25 | கரைகாணா நோயு ளழுந்தா தவனைப் புரைதவக் கூறிக் கொடுமை நுவல்வீர் வரைபவ னென்னி னகலா னவனைத் திரைதரு முந்நீர் வளாஅக மெல்லா நிரைகதிர் ஞாயிற்றை நாடென்றேன் யானு முரைகேட் புழியெல்லாஞ் செல்வேன் புரைதீர்ந்தான் யாண்டொளிப் பான்கொல்லோ மற்று; |
32 | மருள் கூர் பிணைபோன் மயங்கவெந் நோய்செய்யு மாலையும் வந்து மயங்கி யெரிநுதி யாமந் தலைவந்தன் றாயி னதற்கென்னோய் பாடுவேன் பல்லாருட் சென்று: |