1எ - து. கரைகாணாத நடுக்கடலிலே மரக்கலங் கெட்டு அழுந்துகின்றவன் திரை கொண்டுவந்துதர ஒரு தெப்பத்தைப் பெற்றுப் பின்பு தீதில்லையாய்ப் பிழைத்தாற்போல இவள்காதலர் விரைந்து புகுத இடும்பையாவதும் விரைந்துபோயிற்று; அதனைக்காணீரென வாயில்கள் தம்முள்ளே கூறினார். எ - று. எனப்புகுதரவென்க. ஆல், அசை. இதனால், தலைவிக்குப் புணர்ச்சியுவகை பிறந்தது. இஃது ஒத்தாழிசைக்கலி. (17) (135). | துணைபுணர்ந் தெழுதருந் தூநிற வலம்புரி யிணைதிரண் மருப்பாக வெறிவளி பாகனா வயிறிணி நெடுங்கத வமைத்தடைத் தணிகொண்ட வெயிலிடு களிறேபோ லிடுமண னெடுங்கோட்டைப் பயிறிரை நடுநன்னாட் பாய்ந்து றூஉந் துறைவகேள்; | 6 | கடிமலர்ப்புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ்ந்த தோளளாத் துறப்பாயான் மற்றுநின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ; | 9 | ஆய்மலர்ப்புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை நோய்மலிநிலையளாத் துறப்பாயான் மற்றுநின் வாய்மைக்கட்பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ; | 12 | திகழ்மலர்ப்புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை யிகழ்மலர்க்கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின் புகழ்மைக்கட்பெரியதோர் புகராகிக் கிடவாதோ; எனவாங்கு; | 16 | சொல்லக்கேட்டனை யாயின் வல்லே யணிகிளர் நெடுவரை யலைக்குநின் னகலத்து மணிகிள ராரந் தாரொடு துயல்வர வுயங்கின ளுயிர்க்குமென் றோழிக் கியங்கொலி நெடுந்திண்டேர் கடவுமதி விரைந்தே. |
இது வரையாது வந்தொழுகுந் தலைவனைத் தோழி நெருங்கி வரைவு கடாயது.
(பிரதிபேதம்)1எ - து. எனவிவள் சொல்லாநிற்கக்கரை.
|